Thursday, October 31, 2013

இன்டர்வியூ சமாளிபிகேஷன்..!

நீங்க ஒரு Interview-க்கு போய்.. அங்கே உங்களுக்கு தெரியாத கேள்வி கேட்டா... நீங்க என்ன பண்ணுவீங்க..

" தெரியாதுன்னு " சொல்வீங்க..! அப்படிதானே..?!

இனிமே அப்படி சொல்லாம அதை சமாளிக்கறது எப்படின்னு தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..

அது Very Simple..

" If You can't Convience them..
Then.. Try to Confuse Them..! "

இப்ப உதாரணத்துக்கு.

Question No.1 :

" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

" அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!

கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?

இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?

( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ
பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )

Question No.2 :

" பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "

அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .

Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..

??!!?

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "

( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )

Question No 4 :

" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

-------------------------------------------------------------------

இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!

பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?!
பில் கேட்ஸ் அவர்கள் ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்ப்படுத்தினார், அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.

ஓதில் ஒருவர் நமது " ராமசாமி"...

பில் கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம், உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள் (java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..

பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று..

பில் கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்...

500 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : நான் பதினைந்து வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்திருந்து பார்ப்போம்..

பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்..

498 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்...

பில் கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள், எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில் உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்...

ராமசாமி, அமைதியாக மற்றொருவரை பார்த்து...

எந்த ஊரு...?

மற்றொருவன் : " திருநெல்வேலி பக்கம் "

அங்க நிற்கிறான் "தமிழன்"
உயரமான மலை உச்சியில்
நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி நம்ம நாராயணசாமி கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடவுளே.. .!என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக்காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவர் கேட்டார் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாகஅவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்குஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே....

எல்லாம் சரி. அவளை ஏன் முட்டாளாகப் படைத்தாய் ?
-
லேசான நகைப்போடு இவர் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்..
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி
நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்.
பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து,
மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை.
கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி
ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு,
ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே(மிருக டாக்டர்)போய்உடம்பைக் காட்டுங்க!
அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.
என்னது
மிருக டாக்டர்கிட்டேயா?
உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல!
உங்களுக்குத்தான் எல்லாமேகெட்டுப் போய் கிடக்கு!
காலாங் காலத்தாலே கோழி மாதிரிவிடியறதுக்கு
முன்னமேயே
எழுந்திருக்கீங்க!
அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி‘ லபக் லபக்’னு ரெண்டு வாய்தின்னுட்டு,
பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்போறீங்க!
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!
உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!
அப்புறம் ஆபிஸ்விட்டவுடனே,
ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!
வந்ததும்வராததுமா,நாள்பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!
அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு,
எருமை மாடுமாதிரி போய் படுத்து தூங்கறீங்க!
மறுபடியும் விடிஞ்சாஅதேமாதிரி
கோழி கதைதான்!இப்படி இருக்கிறவங்களை
மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?
அதனாலதான் சொல்றேன், நாளைக்கே
ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!
”என்று ஒரே மூச்சில்சொல்லி முடித்தாள் மனைவி.
என்னபதில்சொல்வதென்றுதெரியாமல்
கணவன் முழிக்க,
மனைவி சொன்னள்`
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க'.

Monday, October 28, 2013

அப்பா : டேய் நா சொல்ற பேச்சை கேளுடா
மகன் : நோ நா கேக்க முடியாது ... நா கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்
அப்பா : உனக்கு 4 மாடு வாங்கி கொடுத்தது தப்பா போச்சு. உன்ன B.E, B.Tech, MCA, MBA ன்னு படிக்க வச்சி தெரு தெருவா அலைய விட்டு இருக்கனும்

#அரசியல்_நாகரீகம்