Wednesday, November 20, 2013

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.
போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"
அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."
மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."
போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."
மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"
போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."
மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"
அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."
போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"
மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்."
ஆஹா செத்தாண்டா சேகரு..! :-)))))))))))
இரு சிறை கைதிகள் பேசிக்கொண்டபோது....
"என்ன பாஸ்...போன மாசம் தான ரிலீஸ் ஆனீங்க...அதுக்குள்ள திரும்ப உள்ள வந்துட்டீங்க?"
"அத ஏன் கேக்குறீங்க..இந்த நாட்டுல உண்மையச் சொல்லக் கூட விட மாட்டேங்குறாங்க..."
"ஏன் என்னாச்சு பாஸ்...?"
"புத்தகம் ஒண்ணு எழுதினேனு பிடிச்சிட்டு வந்துட்டாங்கப்பா...."
"புத்தகம் எழுதுனதுக்காக புடிச்சுட்டு வந்துட்டாங்களா..? அப்டி என்ன புத்தகம் எழுதினீங்க?
"அது ஒரு வழிகாட்டி புத்தகம்...."
"போலீஸ் புடிக்கற அளவுக்கு அப்டி என்ன வழிகாட்டி புத்தகம்...?"
"வார்டனை கைக்குள் போட்டுக்கொண்டு ‘சிறைக்குள் சகல வசதிகளையும் பெறுவது எப்படி?'ங்கற தலைப்பிலே சிறைக்குள் நடக்கும் விஷயங்களை எழுதினேன்... இது ஒரு தப்பா....?"
மற்ற கைதியின் மைண்ட்வாய்ஸ்...
"உன்னல்லாம் தூக்குல போடனும்டா...."
கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..
"டேய்! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு"
"ஏம்மா?"
"கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்"
"அப்பா மட்டும் விளையாடுறாரே"
"அவருக்கென்னடா...அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்"
ஒருத்தன் வழக்கம் போல நைட்
தூங்கப்போனான்,
‘டிஷ்’னு ஒரு சத்தத்தோட
புகை மண்டலம்,
நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர்
வந்து,” நான் தான் எம தர்மன் இன்னில
இருந்து உனக்கு 10
வருஷத்துக்கு சாவே இல்ல என்ன
வேணா பண்ணிக்க போ”ன்னாரு.

இவனும் அத நம்பி டெஸ்ட்
பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க
ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம
லோகம் போய்
கோபமா நீதி கேட்டான்,
”எமதர்மா ? இப்படி மோசம்
பண்ணிட்டியே? ஏன் இப்படி செஞ்சே?”
எமன் : “ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச்
பண்ணனும்ல”

Tuesday, November 19, 2013

படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.
முடிஞ்சா புரிஞ்சுக்கோங்க .
.
விஞ்ஞானிகள் சில பேர் நரக லோகத்தில திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடினாங்க..
.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்க வேண்டிய முறை வந்தது..எல்லாருமே ஓடி ஒழிஞ்சுட்டாங்க.
.
ஐசாக் நியூட்டன் மட்டும் ஓடாமல் 1 மீட்டருக்கு ஒரு சதுரத்தை (Squre) வரைந்து அதற்குள் ஒழிந்து கொண்டார்.
.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஈஸியாக கண்டுபிடித்து விட்டு எண்ண ஆரம்பித்து விட்டார்.
.
"..நான் நியூட்டனை கண்டு பிடித்து விட்டேன்".. என்று கத்தினார்.
.
நியூட்டன் சொன்னார்... நான் நியூட்டன் ஒரு சதுரத்துக்குள் ( Square) ஒழிந்துகொண்டேன்.. அதவது ஒரு நியூட்டன்/ ஸ்கொயர் மீட்டர் ( Newton per Square meter) . அதாவ்து ..1 Newton per Square meter ஆனது ஒரு பாஸ்க்கலுக்கு (Pascal) சமம். .ஆகவே எனது பெயர் பாஸ்க்கல்..
.
( 1Newton Square meter = 1 Pascal)
.
(+1 அல்லது +2 படிச்சவங இதுக்கு லைக் போடுவாங்கன்னு நினக்கிறேன்.. )
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.